Friday, May 21, 2010

செவ்வண்ணவொளி ஏரியா

செவ்வண்ணவொளிக்கீழ்
பலரினுயிரனுக்கள்
பிறந்திறந்துலர்ந்த
மஞ்சத்தின் மீதினிலே

கவர்ச்சிக்கிலக்கணமாய்
மென்மையேயுருவகமாய்
அணைத்துருக
மெய்யிலே கலந்துருக



ராவெல்லாமுரக்கமிழந்து
பலரகமாய் பலவிதமாய்
வருவோரிச்சையை வாடிக்கையாய்
காமப்பலிபீடமாய் ஏற்று

செல்வமயம் சூழ்ந்திருக்க
உறவோர்களெல்லாம் தலை முழுகிட
வலிப் பொருத்தின்பமளித்து
சுகமே நரகமாயிட

சாலையோர விளக்குப் போல
வலைவீசி வாடிக்கையாளரை
கவர்ந்திழுக்க நிற்கிறாளவன்
அரவான் மனைவியாம் அரவாணி...

No comments:

Post a Comment