Tuesday, May 18, 2010
தமிழே
தமிழே யார் நீ?
உனக்கும் எனக்கும் உள்ள உறவுதான் என்ன?
கொஞ்சும் தமிழ் கவிதைகளினூடே
எனை தாலாட்டி தாயானாய்....
வள்ளுவனின் கைகோளின் இருவரிகளினூடே
எனை அறிவூட்டி தந்தையானாய்....
இனிய தமிழ் சொற்களினூடே
எனை வாதிட்டு சகோதரனானாய்....
அரும்தமிழ் சங்க்கால பாடல்களினூடே
எனை களியூட்டி தோழியானாய்....
ஔவையாரின் அகர வரிசைகளினூடே
எனை நேர்வழிப்படுத்தி மூதாதையரானாய்....
அருவாய் உருவாய்
அனைத்திலும் சங்கமித்திருக்கிறாயே...
என் மூச்சிலும் பேச்சிலும்
கலந்திருக்கும் தமிழே...
சிரம் தாழ்த்தி, கரம் கூப்பி,
உன் தமிழருள் வேண்டி வணங்குகிறேன் தமிழே...
Subscribe to:
Post Comments (Atom)
super anne...enathu manamaarntha nalvaaltukal...
ReplyDeleteநன்றி.... என்னுடைய முதல் post எப்படி இருக்கு?
ReplyDeletekatru koduthathu tamil enaku.. nam swasathil kalanthirupathum inthe tamil than.. vaalge tamil.. nice da
ReplyDelete