அனைவரின் வாழ்க்கையிலும் காதல் ஏதாவது ஓர் உருவத்தில் வந்து செல்கிறது. அது ஓரின காதலாய் இருந்தாலும் சரி, காதல் காதலே. காதலுக்கு கண் இல்லை. ஆகையால்தான் உருவம், வர்ணம், அந்தஸ்து, வயது, பால் என்று எதுவும் அதன் கண்ணில் புலப்படுவதில்லை.
எனக்கு வந்த காதலுக்கும் கண்ணில்லை போலும். சிறுவயதில் வரும் காதல் என்றுமே இனிமையானதே. அதற்காக நான் செய்தவைகளை இன்று எண்ணிப் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது..
எனக்கு 11 வயது இருக்கும், என் ஆங்கில ஆசிரியர் என் மீது சற்று அதிகமாகவே அன்போடு இருந்தார். அவர் அன்போடு இருந்த போதுகூட எனக்கு ஒரு உணர்வும் பூக்கவில்லை. ஆனால், மறு வருடம் நான் செய்த தவறினால் என் மீதிருந்த அக்கறை சாதரண நிலைக்கு மாற ஆரம்பித்தது. அதோடு அவர் மனம் இன்னொரு மாணவன் மீது படிந்த்து. அப்போது நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே. ஒவ்வொரு நாளும் கட்டில் மேல் குப்புற படுத்து பொறாமைத் தீயால் வெந்து அழுது தீர்ப்பேன். இது காலவோட்டத்தில் மாறிட...
படிவம் ஒன்றில், ஒரு மாணவி என் மீது இடிக்கும் அளவிற்கு வந்து விலகி சென்றாள். அவளை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே நடந்தேன்.
Tuesday, May 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
எழுத்துப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள்! :) -murugan-
ReplyDeleteten wat happen...faster tel la anna??????
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteதமிழ் பிரியன், முருகன் அண்னா, விக்கி sir : நன்றி...
ReplyDeleteவதனா : வந்து விட்டது...