Saturday, December 31, 2011

தெரிந்த புராணம், தெரியாத கதை – கைகேயி கொடியவளா?


இராமயன இதிகாசம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதில் பலதரப்பட்ட கதாபாத்திரம் அமைய பெற்றிருந்தாலும், இராமனே முதன்மை கதாபாத்திரத்தில் அமைந்திருந்தாலும், கைகேயியை யாராலும் மறக்க இயலாது. கைகேயின் சூழ்ச்சியினாலே தான் இராமன் 14 வருடம் வனவாசம் சென்றான்.

பிறந்த்ததிலிருந்து இராமன் மீது வற்றாத பாசத்தோடும், பேரன்போடும், சொந்த தாய் கோசலையைவிட பரிவு காட்டி வளர்த்த தாயா தன் மகனுக்கு இத்தகைய சூழ்ச்சியினை செய்தாள்? அதோடு, பிறந்த்திலிந்து இராமனை, பரதனுக்கும் மேலாக அரவனைத்து வந்தவளை, அவன் ஜானகியை மனமுடிக்கும் வரையிலும் அன்பு மாறாமல் இருந்தவளை கூனியின் சில வார்த்தைகளா மனம் மாற செய்த்தது? தசரதனின் தேர் சக்கரம் விலகாமல் இருக்க தன் கையை அச்சானியை பயன்படுத்தி, அவர் உயிரைக் காத்த புன்னியவதியா தனக்கு கிடைத்த வரங்களை இப்படி சுயநலமாகவும் கீழ்த்தரமாகவும் பயன்படுத்தி இருப்பாள்?

இதற்கு, நான் அறிந்த ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அதாவது, இராமருக்கு பட்டாபிசேகம் என்ற செய்தியை கேட்டவுடன் அனைவரையும் விட கைகேயியே பெருமகிழ்ச்சி அடைந்தாள். அதோடு நிற்காமல் எதிர்க்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சில பிரோகிதர்களை அழைத்து பஞ்சாங்மும் பார்க்க செய்தாள். பஞ்சாங்கத்தை ஆராய்ந்து பார்த்த புரோகிதர்கள், அயோத்தியின் அரியனையில் இந்த பதிநான்கு வருடங்களில் யார் முடி சூட்டபடுகிறார்களோ அவர்களுக்கு உயிர்சேதம் எற்படும் என்று கூறினர். இதை கேட்டு திடுக்கிட்டாள் கைகேயி.

ஆகவே, இராமனை பலி கொடுக்க விரும்பாத அந்த கருனையுள்ளங்கொண்ட தாய், தன் சொந்த மகனான பரதனை தியாகம் செய்ய முடிவெடுத்தாள். அதன் காரணமாகவே, இராமனை பதினான்கு வருட காலம் வனவாசம் செல்ல வேண்டும் என்றும், பரதன் முடிசூட்டபட வேண்டும் என்று தன் வரங்களை தசரிடனிடம் கேட்டான். சொன்ன சொல் தவறுவது அரசன்னுக்கு அழகல்ல. ஆகவே, அவள் வார்த்தையை கனத்த மனத்துடன் தசரதன் நிறைவேற்றி, அந்த துக்கத்திலேயே மரணமும் எய்தினார்.

இவையனைத்தும் அறிய வந்த பரதன் தானும் முடிசூட்டிகொள்ளாது, இராமனின் பாதுகைகளை வைத்து பதினான்கு வருடம் அரசாண்டான். ஆக, புரோகிதர்கள் கனித்த படி எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை.

இந்த பாதுகை சம்பவத்தை நினைவூட்டும் வகையில் இன்றும் பெருமாள் கோயிலில் நம் தலையில் ஆசிர்வதிப்பதற்காக வைக்கபடும் மகுடங்களின் மீது இரு பாதுகை உருவம் இருக்கும். அடுத்த முறை கோவில் செல்லும் போது இதனை கவனித்து பாருங்கள்.

ஆனாலும், என் மனதில் இன்னொரு குழப்பமும் வந்தது. இந்த பஞ்சாங்கமானது கிரதயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனான நகுலன் தான் வகுத்தான் என்று ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம் உண்டு. கிருஷ்ன அவதாரமானது, இராம அவதாரத்திற்கு பிறகே நடந்தது. அப்படியிருக்க, இராமாயனத்தில் பஞ்சாங்கம் எப்படி வந்திருக்கும்?

இராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்ததிற்கு தசரதன் பெற்ற ஒரு சாபமும் காரணம் என்று சொல்லபடுகிறது. ஒரு தடவை, தசரத மன்னன் வேட்டையாட செல்லும் போது மான் என்று நினைத்து புதறுக்கு அப்பால் தண்ணீர் எடுத்து கொண்டிருந்த ஒரு சிறுவனை அம்பெய்தி கொன்றுவிட்டார். அச்சிறுவனின் பெற்றோர்கள் இருவரும் குருடர்கள். “நாங்கள் மகனை இழந்து துயரப்படுவதை போல நீயும், துயர்படுவாய்” என்று அவர்கள் இட்ட சாபமே இந்த சம்பவத்தiற்கு வித்திட்டது என்றும் கூறப்படுகிறது.

அனைவருக்கும் தெரிந்த புராணத்தில், சிலருக்கு தெரியாத கதை இது. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.