“சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிருங்க”
டாக்டரின் கைவிரிப்பு செவியில் ஒலித்தது...
டாக்டரிடம் தந்தை கெஞ்ச...
சன்னிதானங்களின் பெயரை தாய் அடுக்கிகொண்டிருக்க...
அறுந்துபோகபோகும் தாலியை மனைவி இறுக பிடித்துக்கொண்டிருக்க...
ஒன்றும் புரியாமல் குழந்தை அழ...
நான்,
நீண்ட நேர தூக்கத்தை எதிர்ப்பார்த்து...
உடல் களைப்புடன் பேச வலு இல்லாமல்...
கண்ணீருக்கு கண்ணீரால் பதில் அளித்துக் கொண்டு...
காலனின் வருகையை எதிர்ப்பார்த்துகொண்டு,
நான்...
உலகிற்கு வரவேற்று பால் கொடுத்தவள்,
இப்போது வழியனுப்ப பால் கொடுக்கிறாள்,
அனைவரும் எனை சூழ்ந்து நின்று அழுது கொண்டிருக்க,
முன்னோர்கள் புன்னகையுடன் என் வரவிற்கு காத்திருக்க...
மரணப் படுக்கையில் நான்,
மரணத்தை நோக்கி...
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
simply super bro....
ReplyDeleteநன்றி மா...
ReplyDeleterombe nalla eruke da
ReplyDelete