Tuesday, January 17, 2012

ஜாதியாமே???

சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து செதுக்கியவில்லோடு வா நிலவேஎன்ற ஒரு புத்தகத்தை படித்தேன். என்ன ஓர் அழகான காதல் காவியம். ஒவ்வொரு வார்த்தையிலும், ஒவ்வொரு வரியலும் கவி நயம் நிறைந்து வழிந்தது. நாவலை ஒருவர் பாடியது போல இருந்தது.

பல வரலாற்று புத்தகங்களை அலசி ஆராய்ந்து, ஆதரங்களுடன் எழுதி இருக்கிறார் கவிஞர். அந்த காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களையும், பல நடப்புகளையும் ஆதராங்களுடன் மேற்கோள் காட்டி இருந்தார். படிக்க படிக்க திகட்டாத பொக்கிசம் அது.

கதையில் காதல் மிகுந்திருந்தாலும், அதில் ஜாதி மத வேறுபாட்டிற்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது. கதையின் அமைப்பிற்கும், நடைக்கும், திருப்பங்களுக்கும் இந்த பேதம் பெரும் பங்காற்றியது. தொழில், மற்றும் நிலையை பொறுத்து வருனபேதம் என்று இதை கவிஞர் குறிப்பிட்டுருந்தார். நாவலின் முடிவில் நாயகன் சேரலாதன் என்ற மன்னன் தன் உயிர் நண்பன் உம்பர்காடனை இழந்து, தன் நாட்டை துறந்து தன் மனதிற்கு ஒத்த, கவியில் சிறந்த நச்செள்ளை என்ற நங்கை போதும் என்று வனம் செல்கிறான். (முழு கதை தெரிய கவிஞர் வைரமுத்து எழுதியவில்லோடு வா நிலவேஎன்ற புத்தகத்தை தேடி படியுங்கள்)

இந்த நாவலை படித்து முடித்த பிறகு, மலேசியாவில் இருக்கும் நமது இந்தியர்ளின் மன நிலை தான் என் ஞாபகத்திற்கு வந்தது. நமது மலேசியர்கள் ஏற்கனவே, மலாய், சீனர், இந்தியர் என்று மூன்று இனமாக இருக்கிறோம். அதனூடே, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்துவம், சீக்கியம், இந்து என்று மதங்களால் பிரிந்திருக்கறோம். போதாக்குறைக்கு இந்தியர்களுக்குள்ளேயே தமிழ், மலையாளம், தெலுகு, இந்தி, கன்னடம் என்று மொழிகளாலும் வேறுபட்டிருக்கிறோம். இந்த வேற்றுமைகளில் அர்த்தம் இருக்கிறது: கலை கலாச்சாரம் இருக்கிறது: அழகு இருக்கிறது. ஆனால், வை அணைத்தும் போதாது என்று ஜாதி என்று எதையோ ஒன்றை இனைத்து சிலர் அலைகிறார்கள்.

ஜாதியை பற்றி நான் மிக பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. பல நூல்கள் அலசவில்லை. என் தனிப்பட்ட கருத்தையும், கேட்டறிந்ததையும் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு நன்கு பழக்கமான ஒரு இந்திய நபரிடம் பேசி சில விசயங்களை சேகரித்தேன். உங்களோடு இந்தியாவில் அந்த காலத்தில், செய்யும் வேலையை பொறுத்து ஜாதிகள் உருவாக்கப்பட்டது. பொதுவாக கீழ்ஜாதி மேல்ஜாதி என்று இரண்டு.

மேல் ஜாதி என்று பொதுவாக முக்குலம் எனப்படும் தேவர், மரவர்/அகமுடியர், கள்ளர் என்று சொல்கின்றனர். இவர்கள் வீரதீர செயல்களில் ஈடுபடுபவர்கள். கத்தி அருவாள் என்று எடுத்து நியாயத்திற்கு பாடுபடுபவர்கள். இருப்பவர்களிடமிருந்து திருடி/அபகரித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்கள். இவர்களுக்காகவே அக்காலத்தில் சிறைச்சாலை உண்டானதாம். ஆகவே, இவர்கள் மேலாக கருதப்பட்டனர்.

கீழ்ஜாதி என்று பல ஜாதிகளின் பெயரையும் தொழிலையும் என்னோடு பகிர்ந்தார். துணிகளை துவைப்பவர்களை வன்னார் என்றும், டப்பு அடித்து (பரையடித்து) ஊருக்கு செய்தி சொல்பவர்களை பரையர் என்றும், மண்ணால் பண்ட பாத்திரங்கள் செய்பவர்களை குயவர் என்றும், செருப்பு தைப்பவர்களை சக்கிலியர் என்றும், முடி திருத்துபவர்களை அம்பட்டையர் என்றும் கூப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு முதலியார் எனப்படுபவர்கள் பண்ணைகளை பராமரிப்பவர்களாகவும், பண்டாரம் என்பவர்கள் பூ கட்டியும், சமயல் செய்பவர்களாகவும், கோவில் பூஜைகளில் ஈடுபடுபவர்களை ஐயர் என்றும் அன்று வழங்கப்பட்டது.

இப்படி அவர்கள் பிழைப்புக்காக செய்த வேலையை கொண்டு அவர்கள் ஜாதி நிர்ணயிக்கப்பட்டது.

இன்று நமது மலேசிய திருநாட்டிலே, பலர் இன்னமும் இந்த ஜாதியை பின்பற்றி வருவது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. இந்த விசயத்தை என் நண்பரிடம் கூறிய பொழுது அவர் திகைத்து போனார். “என்ன ஐயா சொல்றீங்க, இந்தியாவிலே இந்த ஜாதி பார்பதெல்லாம் குறைஞ்சு போச்சு. இவ்வளவு ஏன் கோவிலிலே திறமையும், தக்க தகுதியும் உள்ள யார் வேண்டுமானாலும் குருக்கள் ஆகலாம் என்ற சட்டமே இருக்கு பா.” என்றார்.

நமது இந்தியர்களில் சிலர் ஒருவரை திட்டும்போதுபரையன், சக்கிலியன்என்று சொற்களை பயன்படுத்துவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த தொழிலை செய்தது அவர்கள் குற்றமா? செய்யும் தொழிலே தெய்வம் என்கிறோம். பிறகு ஏன் பாகுபாடு? அவர்கள் இல்லை என்றால் நம் துணி வெளுத்திருக்காது, செருப்பு உழைத்திருக்காது, தகவல் கிடைத்திருக்காது, முடிதிருத்தபட்டிருக்காது.

கொடுமை என்ன வென்றால், நமது மலேசியர்கள் ஏன், எதற்கு என்று தெரியாமலேயே இந்த ஜாதி பெயர்களை சொல்லி அலைகின்றனர். அந்த பெயரின் பின்னனி என்ன அன்று கேட்டால் கண்டிப்பாக முக்கால்வாசி பேருக்கு தெரியாது. அந்த ஜாதி கீழ்தரமானது என்ற ஒரேயொரு காரணத்தை கொண்டு திட்டும்போதும், ஒருவரை வெறுத்து பேசும் போதும் பயன் படுத்துகின்றனர். அறிந்தவர்கள், அதனை பின்பற்ற மாட்டார்கள்.

சில சம்பவங்களை உதாரணமாக சொல்கிறேன். எனக்கு தெரிந்த தோழி ஒருத்தி விமான நிலையத்தில் அதிகாரியாக வேலை செய்தார். தன்னுடன் சக அதிகாரியாக வேலை செய்த ஒருவருடன் காதல் கொண்டு தன் பெற்றோருக்கு விசயத்தை சொன்னார். அவள் தந்தை அந்த பையன்பரையன்ஜாதி என்று தெரிந்தவுடன், அவனை பார்க்காமலேயே நிராகரித்து விட்டார். என் தோழி வேறு வழியின்றி வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டினாள். என்ன கொடுமை இது? மகளே முடிவு எடுத்து அவசர படாமல் வந்து காதலை சொல்லும் போது, பையனின் வேலை, கல்வி, குடும்பம் என்று பாராமல் இப்படி ஜாதியை அடிப்படையாக கொண்டு வாழ்கிறார்களே என்று தோன்றியது.

இந்த சம்பவத்தால் பாதித்து என் மன குமுறலை ஒரு வயதான பாட்டியிடம் பகிர்ந்தேன். “அவரு செஞ்சது சரிதான், பரையன்னு தெரிஞ்சு பொண்ணை எப்படி கொடுக்கிறதுஎன்றார். எரிச்சலுடன் நான் சொன்னேன், “அவங்களுக்கு என்ன குறை? நம்மல மாதிரி காது, மூக்கு, வாய் தானே இருக்கு? நம்மல மாதிரி தான் வீட்டிலே தங்குறாங்க, படிக்கிறாங்க, வேலையும் செய்றாங்க. அப்புறம் என்ன தடுக்குது உங்களை?”. “டேய், உனக்கு என்ன தெரியும்? அவங்க மாடு சாப்பிடுவாங்க தெரியுமா?” என்றார் மிகுந்த பதற்றத்துடன்,

எனக்கு சிரிப்புதான் வந்தது. மாடு சாப்பிடுவது அவரவர் விருப்பம். நான் மாடு சாப்பிடுவதால் தேகம் எரிந்து சாகபோவதுமில்லை, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க போவதும் இல்லை. சரி விடுங்கள். எனக்கு தெரிந்த வரை மலேசியாவாழ் இந்துக்கள் என்றாலே அவர்கள் மாடு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். மாடு பால் தரும் அன்னை என்று உண்ண மாட்டார்கள். ஆக, பரையர்கள் அதனை விரும்பி உண்ணுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதே சமயத்தில், உயர்தகுலம் என்று குறிப்பிட்டவற்றை சேர்ந்த என் நண்பன் மாடு சாப்பிடுவதை நான் தடுத்ததும் இல்லை. நாளை எனக்கே மாட்டு இறைச்சி சாப்பிடும் நிலை வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். பதட்ட படவும் மாட்டேன்.

சரி, இந்த மாடு சாப்பிடும் விசயத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று என் இந்திய நண்பரை கேட்டேன். “ஆமா, பாரத் இந்த கீழ்ஜாதி-னு நான் சொன்னவங்க மாடு விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா, அது அவங்க குற்றமும் இல்லை. அவங்க ஏழ்மையிலே வாடுறவங்க. வறுமையான குடும்பம். ஆடு, கோழி வாங்கி சாப்பிடும் அளவுக்கு வசதி பத்தாதவங்க இந்தியாவிலே ஆடு, கோழியை விட மாட்டு இறைச்சி மலிவா கிடைக்கும்.” திகைப்பான ஓர் உண்மையாக இருந்தது. அதனால் தான் அவர்கள் வசதிக்கேற்ப மாடு உண்டார்கள். இதில் என்ன தவறு?

அடுத்ததாக, என குடும்பத்திற்கு பழக்கமான ஒருவர். அவர் எங்கள் குடும்பத்தில் வந்து பழக்கமாகி பத்து வருடங்களுக்கு மேலாக ஆக போகிறது. அவரை நம்பி எங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுத்து அனுப்புவார்கள். சரியான இடத்தில் ஒரு காசு கூட குறையாமல் சேர்த்திடுவார். அவர் பண விசயத்தில் மிக நாணயமாக நடந்து கொள்வார். அவர் கள்ளர் ஜாதி. ஜாதிக்கும் அவர் குணத்திற்கும் சம்பந்தமே இல்லையே.

சரி வயதானவர்களும் இந்தியாவில் இருந்து வந்த சிலரும் தான் இப்படி யோசிக்கிறார்கள் என்றால் இன்றைய இளைஞர்களும் அல்லவா கூட்டு சேர்ந்து ஆர்பரிக்கின்றனர். தலைக்கும் என் தலை முறையாவது இந்த கேட்டை விட்டு தொலைக்கும் என்றால், அவர்களும் சேர்ந்தல்லவா ஜாதி வெறி கொண்டு அலைகின்றனர். பிறக்கும் குழந்தைகளுக்கும் ஜாதி வெறியை ஊட்டுகின்றனர்.

எனக்கு தெரிந்த சிலர்பரையர்”, “சக்கிலியர்போன்ற ஜாதியில் வந்தவர்களை திருமணம் செய்து மிகவும் சிறப்பாகவே வாழ்கிறார்கள். குடும்பமும், சுற்றத்தாரும் தடுத்தும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்த ஒரு ஜோடி, இன்று வீடு, வாசல், கல்வி, செல்வம் என்று சுகமாக வாழ்கின்றனர். ஜாதி அவ்ர்களுக்கு ஒரு இடையூறும் செய்யவில்லை. வளர்ச்சிக்கும் சந்தோசத்திற்கும் தடை போடவேயில்லை.

நம் திருநாட்டில், எப்பேர்பட்ட கீழ்ஜாதியில் பிறந்தாலும் ஒருவன் சரியான வழிகாட்டியுடனும், உழைப்புடனும் ஒரு மருத்துவராகலாம். மிக உயர்ந்த ஜாதியில் பிறந்திருந்தாலும் தப்பான வழிகாட்டியுடனும், நண்பர்களின் ஈர்ப்பினாலும் குட்டிசுவராகி பொறுக்கியாகலாம்.

என்னை கேட்டால் ஜாதி என்பது மலேசியாவில் இருக்க கூடாத, இருக்க வழியே இல்லாத ஒன்று. இருப்பது ஒன்று ஆண்ஜாதி, மற்றொன்று பெண்ஜாதி.. இருக்கும் பிரிவினைகள் போதும். ஒற்றுமையாக இருப்போம். வேற்றுமை பாராது வாழ்வோம்.

ஆக, ஜாதி வேண்டாமே, ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று ஒரு நூற்றாண்டுக்கு முன் சொல்லி வைத்த பாரதி வழி நடப்போம். அவர் கனவை நிறைவேற்றுவோம்.

5 comments:

  1. unnai pol ilainyergal thaan intha jaathi endra viyathiyai thudaika mudiyum!

    Muthiyavargal palar innum intha jaathi moogathil irrukiraargal!

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில் மூழ்கி கிடக்கின்றனறே...

      Delete
  2. enna varutham endral pala padithavargal kooda intha jathi endra nooyei pinpatrugiraargal! - chelian

    ReplyDelete
    Replies
    1. அதுதான் பா வருத்தமாக உள்ளது... ஆராய்ந்து அறியாமல் கண்மூடித்தனமாக பின்பற்றூகிறார்கள்.... அய்யகோ...

      Delete
  3. நீங்கள் கூறிய சில கூற்றுகள் தவறானது உங்களை உயர்த்தி கொண்டு மற்றவரை தாழ்த்தி கூறியுள்ளீர் சிந்து சமவெளி நாகரிகம் படிங்கள பல உண்மைகள் மறைக்கப்ட்டீறிக்றன இப்போது யார் கீழே இறிக்கறாரோ அவர்கள் மேலே இருந்தார்கள் மேல இருப்பவர்கள் கீழே இருந்தார்கள் இதானல் அன்றைய வைரமுத்து பெருமை பேசதீர் அவரே சாதிய வாதி

    ReplyDelete