Saturday, January 7, 2012

இரயில் பயணம்

இன்று எனக்கு வீட்டில் செம்ம போர். சரி, பக்கத்தில் உள்ள சிரம்பானுக்கு படம் பார்க்கலாம் என்று சென்றேன். அதற்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

எனக்கு அருகிலே ஓர் இந்திய நாட்டை சேர்ந்த நபர் இருந்தார். என்ன நினைத்தாரோ என்னவோ என்னிடம் வந்து தீப்பெட்டி கிடைக்குமா என்று கேட்டார் நானும் தந்தேன். சில நிமிடங்களுக்கு பிறகுதமிழா?” என்று என்னை கேட்டார். நானும்ஆமாஎன்றேன்.

எங்கள் உரையாடல் ஆரம்பித்தது. ஏன் தான் ஆரம்பித்தோம் என்று இறுதியில் நினைத்திருப்பார். பல விசயங்கள் பேசினோம். அவர் கூறிய சில விசயங்கள் என்னை யோசிக்க வைத்தன, சில விசயங்கள் அருவருப்பை தூண்டின.

முதலில் அவர் கூறிய விசயம், பெண்கள். “எங்க ஊரிலே, கெண்டை கால் தெரிஞ்சாலே, அய்யோ யாராவாது பார்பாங்க-னு பொண்ணுங்க பாவாடையை இழுத்து மூடுவாங்க. இங்க என்ன-னா தொடைக்கு மேலே தெரியும் அளவுக்கு உடுத்துராங்கஎன்றார். பிறகு, ஆண்கள், “எங்க ஊரிலே ஆம்பளங்க யாரும் தோடு போட மாட்டாங்க, ஆனா, மலேசியாவிலே, முக்கியமா இந்திய ஆண்கள் எல்லாமே போடுராங்க. ஒரு சம்பிரதாயத்து காது குத்து எங்க நாட்டிலே நடக்கும், ஆனா அதுக்கு பிறகு தோடை கழட்டி பெண் பிள்ளைக்கு தந்திருவாங்க.”

அதற்கு நான் சொன்னேன், இந்த ஊரில் இது நாகரீகமாக கருதப்படுகிறது. அதில் ஏதும் தப்பு இருக்கிறதா எனக்கு தெரியவில்லை. இதோ நான் நகம் வளர்க்கிறேன். அதோ அங்கு ஓர் ஆண் மகன் தன் முடியை கட்டி இருக்கிறான். இதெல்லாம், ஒரு நாகரிகமாவும், எங்கள் இச்சையாகவும் ஆகிவிட்டது. என்னை பொறுத்தவரை மற்றவருக்கு தீங்கு ஏதும் விளைவிக்காத வரை நாம் செய்வது சரியே. மற்றவர்களின் சிந்தனை பற்றி எனக்கு கவலை இல்லை.

அதன் பிறகு தான் எங்கள் பேச்சு ஒரு சுவாரசியமான் கோனத்திற்கு சென்றது. அவர் லட்ச ரூபாய் கட்டி மலேசியா வந்தாராம். வந்து ஒரு வருடம் ஆகிறது. இன்னும் இரண்டு வருடம் வேலை செய்த பிறகு திருமனம் செய்துகொள்வேன் என்றார். வரும் பெண் 30 பவுன் நகையும் ஒரு மோட்டார் வண்டியுடனும் வருவாள் என்றவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

வரதட்சனை பற்றி திரைப்படங்கள்களில் மட்டுமே பார்த்த எனக்கு இப்படி ஒருவர் நேரில் சொன்னது அதிர்ச்சியாகவே இருந்த்து. 30 பவுன் கொடுத்து இவரை மண்ந்து கொள்ளும் அளவிற்கு இவர் பேரழகனாவோ, வசதியான பையனாகவோ தெரியவில்லை. வசதியானவராக இருந்தால் ஏன் மலாயா வரப்போகிறார்.

அவரிடமே சொன்னேன், “என்ன சொல்றீங்க? இன்னும் வரதட்சனை எல்லாம் இருக்கா? அதுவும் 30 பவும் வரைக்கும்?” என்றேன். “அது வரதட்சனை இல்லை, ஆனா எங்க ஊரிலே...” என்று நிருத்தி பேச்சை மாற்றினார்.

என்னை கேட்டார், “இந்த நாட்டிலே நீங்க கல்யானத்திற்கு எவ்வளவு நாள் லீவு போடுவீங்க”. “மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாரம், சிலர் ரெண்டு வாரம், வேலையை பொறுத்ததுஎன்றேன்.

’’நாங்க கல்யானத்திற்கு பிறகு ஒரு வருசம் வேலைக்கு போக மாட்டோம் எங்களை போக விடமாட்டாங்கபெருமை ததும்பும் குரலில் தொடர்ந்தார். “எங்க பொண்டாட்டி கொண்டு வந்த நகை நட்டு எல்லாம் அடகு கடைக்கு போர வரைக்கும், பொண்டாட்டி கர்ப்பமாகி தாய்வீடு போரவரைக்கும் வீட்டிலேயே இருப்போம்.”

என்ன கேவலம்என்று மனதில் எண்ணினேன்.

அருமையான வீட்டு சாப்பாடு சாப்பிட்டிருக்கீங்களா? நிம்மதியா உட்கார்ந்து சாப்பிட்டிருக்கீங்களாஎன்றார். எனக்கு சுர்-என்று இருந்தது. நமது அவசர வாழ்கையையும், பொருள்தேடி அலையும் போக்கையும் கூறுகிறாரோ என்று நினைத்தேன். பதில் தேடி நான் சொல்வதற்குள், அவரே பேசினார்.

எங்க பொண்டாட்டிக்கு நாங்க சமைக்கிற வேலையை தவிர வேறு எதையும் தரமாட்டோம்என்றார் மிக கம்பீரமாய்.

எனக்கு கோபம்தான் வந்தது. அவர் பாணியிலே கேட்டேன், ”என்னது? வேறு வேலையே இல்லையா? உங்க ஊரு பாரதி சொன்ன பெண் உரிமையும், பெண் கல்வியும், பெண் விடுதலையும் என்ன ஆச்சு?” என்றேன்.

சற்று தடுமாறினாலும், சமாளிக்கும் தோரனையில் ‘’அப்படி இல்லை, அவங்களுக்கு சம உரிமை கொடுப்போம், வெளியே எல்லாம் கூட்டி போவோம், வருவோம், ஆனா வெளியே சாப்பிடாமா வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவோம். அதெத்தான் சொல்ல வந்தேன்.”

திருப்தி அடையாத நான், ”அதெல்லாம் சரிதான், ஆனா பெண்ணுக்கு சமைலறையிலே தானே இன்னமும் வச்சிருக்கீங்கஎன்றேன்.

பெண்ணு படிச்சு வேறே என்னதான் பன்ன போதுஎன்றார்.

உச்சி மண்டையில் மணி அடித்தது எனக்கு. அதே சமயத்தில் சிரம்பானும் நெருங்கி விட்டது.

உங்க ஊரு ஜெயல்லிதா பொம்பலை தானேஎன்றேன்.

ஆனா அவருடைய கல்யானம்என்று ஆரம்பித்தவரை, நிறுத்திஅவர் கல்யான வாழ்க்கையோ, ஊழல் வாழ்க்கையோ, இல்லை அவர் எப்படி இருந்தாரோ என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஒரு பெண்ணாக இருந்து நல்ல இடத்தில் இருக்கிறார்தானே. அதே மாதிரி உங்க வீட்டு பெண் பிள்ளைகளை வளர விட்டாதானே அவர்களும் சாதிப்பாங்கஎன்றபடியே ரயிலை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நிலையத்தை விட்டு வெளியாகும் போதுசரி, பார்ப்போம்என்று பிரிந்து நடந்தோம்.

எங்கள் உரையாடல் அவர் மனதிற்கு சிறு மாறுதலை கொடுத்திருந்தாலும் எனக்கு சந்தோசம் தான்.

இந்திய நாட்டை சேர்ந்தவர் இப்படி இருக்கிறாரே என்று குறை கூற இதை எழுதவில்லை. இந்த காலத்திலும் இன்னும் இப்படி பட்டவர்கள் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.

4 comments:

  1. naagareegham than idathirkku yearppa..maarum...for example: ear piercing...angey oru samprathayathirkku pin, remove panniduranga...aana ingey poddurukirom...kutram illai...nice writing pa...:)

    ReplyDelete
  2. Barath,
    Not everyone, like that man, still few disease are here...

    ReplyDelete
  3. yes Shree... not everyone, just wondering that still got ppl like this....

    ReplyDelete